தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி விழுந்து பலி







தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி விழுந்து பலியானார்.

இராமநாதபுரம் மாவட்டம் 
தொண்டி அருகே உள்ள மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 43) மீனவர். இவர் சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கடலில் பிடித்து வந்த மீனை ஏற்றிக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த அன்சல்வா என்பவருடன் தொண்டியை நோக்கி சென்றுள்ளார். அழகர்சாமி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையில் காசி ஊருணி அருகே சென்ற போது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் ரோட்டில் கவிழ்ந்தது. 

இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருந்த அழகர்சாமியை தொண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments