கோட்டைப்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைனான்சியர் உயிரிழப்பு!



கோட்டைப்பட்டினம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி பைனான்சியர் பலியானார்.

கோட்டைப்பட்டினம் அருகே தத்தணி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 55). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டைப்பட்டினம் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments