தேவகோட்டையில் ஸ்கூட்டர் ‘ஆக்சிலேட்டரை குழந்தை திருகியதால், துணிக்கடைக்குள் வாகனம் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் தாய், மகள் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஊனியூரைச் சேர்ந்த அற்புதராஜ் மனைவி கவுசல்யா (26). இவர் தனது 2 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் தேவகோட்டைக்குச் சென்றார்.
அங்கு திருப்பத்தூர் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டு புறப்பட்டபோது, வாகனத்தின் முன்புறம் நின்று கொண்டிருந்த குழந்தை திடீரென ஆக்சிலேட்டரை திருகியது. இதில் ஸ்கூட்டர் அதிவேகத்தில் சென்று, அங்கிருந்த துணிக்கடையின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நுழைந்தது.
வாகனம் மேஜையில் மோதி சரிந்து விழுந்ததில் கவுசல்யாவும், அவரது மகளும் காயமடைந்தனர். கடை ஊழியர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.