KSR பெங்களூா் - வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு





      
KSR பெங்களூா் - வேளாங்கண்ணி - பெங்களூா் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூலை 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு ரயில்வே பெங்களூா் - வேளாங்கண்ணி - பெங்களூா் சிறப்பு கட்டண விரைவு ரயில்களை (06547- 06548) வாரம் ஒரு முறை சனிக்கிழமைகளில் கடந்த மாா்ச் 25- ஆம் தேதி முதல் ரயில்வே இயக்கி வருகிறது.

பயணிகளின் வரவேற்பைக் கருத்தில் கொண்டு அவ்வபோது, இந்த ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை பெங்களூா் - வேளாங்கண்ணி ரயில் மே 27- ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தென்மேற்கு ரயில்வே இந்த ரயில் சேவையை ஜூலை 8-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

பெங்களூா் - வேளாங்கண்ணி - பெங்களூா் ரயிலில்

சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை. எனவே, அனைத்து தரப்பு மக்களும் இந்த ரயிலை பயன்படுத்தும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments