எமக்கலாபுரம் ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எமக்கலாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கைலாசம்பட்டி, அண்ணா நகர், எமக்கலாபுரம், வேலம்பட்டி, ஆதி காலனி மற்றும் கருப்புடையான் பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள் உள்ளது. மேலும் அங்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் மது விற்பனை
இந்நிலையில் அங்கு அரசு மதுபான கடைகள் மட்டுமல்லாமல் மளிகை கடை மற்றும் டீக்கடைகளிலும் சில்லரை விற்பனைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் ஊரில் உள்ள ஆண்கள் காலை முதலே மது அருந்துவது வழக்கமாக இருந்து வருகின்றது.
எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பெண்கள் புகார்
மேலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாமலும், ஆண்கள் சரியாக வேலைக்கு செல்லாமலும் குடித்துவிட்டு ஊருக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் புகார் தெரிவித்தனர்.
மதுபானம் தடை செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவிப்பு
இளைஞர்கள் மற்றும் ஆண்கள் குடித்துவிட்டு ஊருக்குள் அடிதடி பிரச்சனையில் ஈடுபடுவதை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் எமக்கலாபுரம் ஊராட்சி மதுபானம் தடை செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவித்தார். அதனால் ஊருக்குள் இருந்த மதுபான கடைகள் மூடப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லுரி செல்லும் மாணவர்கள்
மேலும் மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் சில்லறையாக, மதுபானம் விற்பனை செய்ய கூடாது என்று எச்சரித்துள்ளார்.மேலும் தற்போது எமக்கலாபுரம் ஊராட்சி பகுதிக்குள் மதுபானம் விற்பனை செய்யாததால் தினமும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், ஆண்கள் வேலைக்கும் சென்று விடுவதாகவும்இதனால் ஊருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக அப்பகுதி பெண்கள் மகிழ்வுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.