தமிழகத்திற்கே முன் மாதிரியாக மது விற்பனைக்கு தடை விதித்த ஊராட்சி கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை




எமக்கலாபுரம் ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எமக்கலாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கைலாசம்பட்டி, அண்ணா நகர், எமக்கலாபுரம், வேலம்பட்டி, ஆதி காலனி மற்றும் கருப்புடையான் பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள் உள்ளது. மேலும் அங்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் மது விற்பனை

இந்நிலையில் அங்கு அரசு மதுபான கடைகள் மட்டுமல்லாமல் மளிகை கடை மற்றும் டீக்கடைகளிலும் சில்லரை விற்பனைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் ஊரில் உள்ள ஆண்கள் காலை முதலே மது அருந்துவது வழக்கமாக இருந்து வருகின்றது.

எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பெண்கள் புகார்

மேலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாமலும், ஆண்கள் சரியாக வேலைக்கு செல்லாமலும் குடித்துவிட்டு ஊருக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் புகார் தெரிவித்தனர்.

மதுபானம் தடை செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவிப்பு

இளைஞர்கள் மற்றும் ஆண்கள் குடித்துவிட்டு ஊருக்குள் அடிதடி பிரச்சனையில் ஈடுபடுவதை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் எமக்கலாபுரம் ஊராட்சி மதுபானம் தடை செய்யப்பட்ட ஊராட்சியாக அறிவித்தார். அதனால் ஊருக்குள் இருந்த மதுபான கடைகள் மூடப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லுரி செல்லும் மாணவர்கள்

மேலும் மளிகை கடை மற்றும் டீக்கடைகளில் சில்லறையாக, மதுபானம் விற்பனை செய்ய கூடாது என்று எச்சரித்துள்ளார்.மேலும் தற்போது எமக்கலாபுரம் ஊராட்சி பகுதிக்குள் மதுபானம் விற்பனை செய்யாததால் தினமும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், ஆண்கள் வேலைக்கும் சென்று விடுவதாகவும்இதனால் ஊருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக அப்பகுதி பெண்கள் மகிழ்வுடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments