புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமையில் நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கயல்விழி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்துதுதல் வேண்டும் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை தராத மாணவர்களின் பெற்றோரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாணவர் படிப்பை தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும், சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு விருது வழங்கப்படுகிறது என்றும், உயர் கல்வி வழிகாட்டல், நான் முதல்வன் திட்டம் பற்றி எடுத்து கூறப்பட்டது.
மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு மாணவர்களை வரவழைக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்பள்ளியின் ஆசிரியர் கொடியரசு நன்றி உரை கூறினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பிரியதர்ஷினி செய்திருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.