கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் புதர் போல் மண்டிக்கிடந்த சீமை கருவேல மரங்கள், விளையாட்டு மைதானத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளை இளைஞர்கள் சரி செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் அங்கன்வாடி அருகே சீமை கருவேல மரங்கள் புதர் போல் மண்டியும், பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியும், பள்ளிவாசல் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது.
இந்நிலையில் அவுலியா நகர் பகுதி இளைஞர்கள் JCB இயந்திரம் மூலம் புதர் போல் மண்டி கிடந்த சீமை கருவேல மரங்கள் அகற்றியும், அந்த பகுதியில் காணப்பட்ட பள்ளங்களை சரி செய்தும், மேலும் பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
அவுலியா நகர் பகுதி முகப்பில் இருந்த ஆலமரத்தின் வேர் பகுதி பலம் இழந்து காணப்பட்ட நிலையில் கடந்த 7/09/2021 அன்று திடீர் என வீழ்ந்தது. அதனையடுத்து வீழ்ந்த ஆலமரத்தை அவுலியா நகர் பகுதி இளைஞர்கள் அதே இடத்தில் நட்டு வளர்த்து வந்த நிலையில் துளிர் விட்டு வளர்ந்து வந்தது. ஆனால் சில மாதங்கள் கழிந்த நிலையில் பட்டு போனது. இதையடுத்து அதன் வேர் பகுதி அகற்றப்படாமல் இருந்ததையடுத்து வேர் முழுவதும் அகற்றப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் செய்ய வேண்டிய இந்த பணியை அவுலியா நகர் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களுடைய பொருளாதாரத்தை கொண்டு அசுத்தமாக இருந்த பகுதிகளை சுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுலியா நகர் பகுதியில் பொதுநல பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் சமூக ஆர்வலர் Dr.முகமது ரியாஸின் செயலை GPM மீடியா மனமார வாழ்த்துகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.