மூக்குடி ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய கட்டிடத்திற்கு எம்எல்ஏ ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மூக்குடி ஊராட்சியில் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்.
மூக்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் மாணவர்கள் மரத்தின் நிழலில் இருந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் தொகுதி நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
நகர தலைவர் கிருபாகரன், கூடலூர்முத்து, தேவதாஸ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஓய்வு ஆசிரியர் நடராசன், தலைமையாசிரியை சரஸ்வதி, ஆசிரியர்கள் ஜோதிமணி, ஆர்.பாரதி, ரெத்தின முத்து வள்ளி, தமிழரசி, சத்தியா, சித்ரா, பால்ராஜ், வட்டார கல்வி அலுவலர் நிஸார், ஊர் அம்பலம் அம்பாள் சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊர் முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.