ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி மீன்பிடிக்க சென்றபோது ஒரு விசைப்படகு, தேவா, நடராஜன், நாகராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்கள், மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஒரே நாளில் நான்கு விசைப்படகுகள் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்யப்படாது என எச்சரித்து 22 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இருப்பினும், அவர்களின் 4 படகுகளையும் விடுவிக்க மறுத்துவிட்டனர். இதனைதொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாள்களில் நாடு திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.