ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே வேள்வரை ஒத்தக்கடையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயம் வேள்வரை ஒத்தக்கடையில் இருந்து ஆவுடையார்கோவில் சாலையில் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 45 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, புது பூட்டு ஆகிய பிரிவுகளில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டிகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
பரிசு
பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாட்டின் உரிமையாளர் களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஒத்தக்கடை-ஆவுடையார்கோவில் சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு களித்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை மீமிசல் போலீசார் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.