ராமநாதபுரம் கீழக்கரை ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியில் தற்போது ரெயில்வே தண்டவாள பகுதியில் 120 டன் எடையுள்ள ராட்சத இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மேம்பாலம் பணி
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி மதிப்பிலும், கட்டுமான பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட பணிகள் 2 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களினால் தாமதமானது.
தற்காலிக பஸ் நிலையம்
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் பயனாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் இருபுறமும் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இடதுபுறம் மட்டும் அணுகு சாலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை வழியாக பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைந்ததும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மற்றொருபுறம் அணுகு சாலை அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, தற்போது ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த மாத இறுதியில்
இந்த மேம்பாலத்திற்காக ராட்சத இரும்பு கர்டர்கள் கொண்டுவரப்பட்டு தண்டவாளத்தின் மேல் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்காக திருச்சியில் இருந்து 56½ மீட்டர் நீளமுள்ள தலா 120 டன் எடையுள்ள 8 இரும்பு கர்டர்கள் வரவழைக்கப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் பொருத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதற்காக ராமநாதபுரம் கீழக்கரை ரெயில்வே கேட் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் அனைத்தும் நேருநகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் மாற்று வழியில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கர்டர்கள் பொருத்தப்பட்ட பின்னர் அதன்மேல் மேம்பால இணைப்பு பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஒருபுறம் மேம்பால சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் ரெயில்வே தண்டவாள மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.