கோபாலப்பட்டிணம் , மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம்






கோபாலப்பட்டிணம் , மீமிசல் பகுதியை  கருமேகங்கள் கூட்டம் சூழ்ந்தது 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதாவது, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.   

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது ,‌ஆறுதலாக  அவ்வபோது மழையும் பெய்து வருகிறது

இன்று ஜூலை 08 சனிக்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து. பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து  மழை பெய்து வருகிறது மலைப்பிரதேசம் போல  குளிர் நிலவி வருகிறது.இதனால் கோபாலப்பட்டிணம்.பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் 
புகைப்படம் & வீடியோவை எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டனர்

இது போன்று நமதூர்  மேகமூட்டம் மற்றும் இயற்கையான புகைப்படங்களை  எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்.













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments