தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, தோப்பு கொல்லை ஆகிய வனத்துறை சரகங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் தயாராகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கம், பல்லுயிர் பரவல், நபார்டு ஆகிய 3 திட்டங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்பட உள்ளது. அவர்கள் அந்த மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு நிலங்கள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
விரைவில் வழங்கப்படுகிறது
தேக்கு, வேங்கை, செம்மரம், பலா மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பள்ளி, கல்லூரிகள், அரசு நிலங்கள், குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் நாவல், நெல்லி, பாதாம், மகாகனி, வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. விரைவில் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் மூலம் வனப்பரப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.