தோட்டக்கலைத்துறை மூலம் புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது. புதுக்கோட்டையில் வெளி மார்க்கெட் கடைகளில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரைக்கும் விற்பனையாகிறது. உழவர் சந்தையில் கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்றது. இந்த நிலையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு சற்று குறைந்த விலையில் வினியோகம் செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி புதுக்கோட்டை உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்படுகிற டான்ஹோடா விற்பனை மையத்தின் மூலம் தக்காளி விற்பனை நேற்று முதல் தொடங்கியது. ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இந்த தக்காளி விற்பனையை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று 5 பெட்டிகளில் 150 கிலோ தக்காளி திருச்சியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யப்பட்டன. தக்காளி விலை குறையும் வரையில் இந்த விற்பனை நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரம் தயாரிக்கும் மையம்
உழவர்சந்தையில் செயல்படுகின்ற அனைத்து கடைகளையும் விற்பனை செய்யப்படும் காய், கனி பொருட்களையும் கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். உழவர் சந்தைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். பின்னர் நகராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.