ஆலங்குடி தாலுகாவில் சுமார் 20 ஆண்டு காலமாக பல கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஆலங்குடியை சுற்றியுள்ள கிராமமக்கள் அமைச்சர் மெய்யநாதனுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து மனுக்களை அளித்து வந்தனர். இதைதொடர்ந்து சி.ஆர்.ஐ.டி.பி. 2022-23 ஆண்டிற்கான திட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணிகள் மற்றும் சாலையை வலுப்படுத்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சிகள்) கோகுலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.