ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது மாலங்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவரது மகள் சிறுமி யாசினி (வயது 8) அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தனது அம்மாவிடம் தின்பண்டம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அவரது தாய் 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து கடையில் தின்பண்டம் வாங்கிக் கொள்ளுமாறும் நாணயத்தை பத்திரமாக கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் ரூ.5 நாணயத்தை வாயில் போட்டபடி சிறுமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாணயத்தை சிறுமி விழுங்கியுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது தாயிடம் ஓடிவந்து நாணயத்தை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் பதறி துடித்த சிறுமியின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாணயத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் தொண்டையில் சிக்கிய நாணயம் உள்ளே சென்று விட்டது. இதனால் சிறுமியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்று பகுதியில் நாணயம் இருப்பதை கண்டறிந்தனர். நாணயத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் டாக்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சிறுமிக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே சிறுமி ஒருவர் ரூ.5 நாணயத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.