புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 7-ந் தேதி அதிகாரிகள் பணிகளை முடித்துவிட்டு வங்கியை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வங்கியில் இருந்து புகை வெளிவந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறை, மணமேல்குடி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கி கதவை திறந்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியிலிருந்த கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.
லாக்கரில் இருந்த பணம், நகைகள், முக்கியமான ஆவணங்கள் தப்பின
இந்நிலையில் மணமேல்குடி பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
மணமேல்குடி பாரத ஸ்டேட் வங்கி கிளை வாடிக்கையாளங்ளுக்கு இந்த வங்கியில் எதிர்பாராத மின்கசிவுனால் ஏற்ப்பட்ட விபத்துகாரணமாக தற்காலிகமாக ATM மற்றும் வங்கியில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக (மீமிசல் பாரத ஸ்டேட் வங்கி) கிளையில் செயல்படும்.
குறிப்பு: பொதுமக்களின் பணம், தங்கநகை பாதுகாப்பு பெட்டகம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது
இவன்
கிளை மேலாளர் - பாரத ஸ்டேட் வங்கி
மணமேல்குடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.