இலங்கை சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டை மீனவர்கள் உள்பட 22 பேர் சென்னை வந்தடைந்தனர்




ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள், கடலூரை சேர்ந்த 2 மீனவர்கள் என 22 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 பேரையும் கைது செய்தனா். பின்னர் அவர்களை படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 22 பேரையும் இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த தமிழக மீனவர்கள் 22 பேரையும் பா.ஜனதா சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி சால்வை அணிவித்தும், உணவு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments