மாணவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குடுமியான்மலை ஊராட்சிக்கு உட்பட்ட மரிங்கிப்பட்டி அரசு ஆரம்ப மேல்நிலைப் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதற்காக ஆசிரியர் திருப்பதி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரியாக தலைமை ஆசிரியர் நாகலட்சுமியும், தேர்தல் அலுவலர்களாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்துமணி, கருப்பையா, பழனியாண்டி ஆகியோரும் செயல்பட்டனர். மேலும் தேர்தல் பார்வையாளர்களாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு பெற்றனர்.
தேர்தலுக்கான தேதி முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்று வேட்பாளர்கள் புகைப்படம் அடங்கிய வாக்குச் சீட்டைப் பெற்று ஜனநாயக முறைப்படி வாக்களித்தனர்.
இறுதியாக வெற்றி பெற்றவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் உள்துறை அமைச்சராக பிரவீன், தர்வீந்தனாவும், வெளியுறவுத்துறை அமைச்சர்களாக சூரிய பிரகாஷ், தரணி ஆகியோரும், மதிய உணவுத்துறை அமைச்சராக விக்னேஸ்வரன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வாக்காளர்களாக பங்கேற்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு இளம் வயதிலேயே தேர்தலின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் தெரியப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தேர்தல் அந்தப் பகுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த முயற்சி இந்தியாவிற்கு தேவையான நாளைய நல்ல தலைவர்களை உருவாக்கும் என்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.