தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம் 21-07-2023 டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது.
டெல்லியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க முக்கிய ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேயும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கையெழுத்திட்டனர்.
அதேபோல நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல மேலும் இரண்டு ஒப்பந்தங்கள் என்று மொத்தம் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து ஆகியுள்ளன.
இந்த கப்பல் போக்குவரத்திற்கு இலங்கையில் அனைத்து அனுமதிகளும் தரப்பட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பலில் முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துசெல்லலாம். கட்டணமாக இலங்கை ரூபாயில் 40 ஆயிரம் (இந்திய மதிப்பு ரூ.9,878) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு 5 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தன. இதில் ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ. என்ற நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.