மீமிசல் கல்யாண ராமசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கல்யாண ராமசாமி கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் கல்யாண ராமசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடிேயற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைெதாடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கல்யாண ராமசாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டம்
இதைதொடர்ந்து புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா மற்றும் சந்திரசேகரன், செயல் அலுவலர் அருணா தேவி ஆகியோர் தலைமையில், ஆலத்தூர், மீமிசல் குடியிருப்பு அம்பலங்கள் மற்றும் கிராமத்தார்கள் முன்னிலையில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடியிருந்து தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.