அறந்தாங்கியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக பள்ளிவாசலை சுற்றி வரும் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் இஸ்லாமிய நண்பர்கள் 3000 பக்தர்களுக்கு குளிர்பானம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது




அறந்தாங்கியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக பள்ளிவாசலை சுற்றி வரும் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் 
இஸ்லாமிய நண்பர்கள் 3000 பக்தர்களுக்கு குளிர்பானம் கொடுத்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில்  இரண்டாம் நாள் நடைபெற்ற தேரோட்டத்தில் இஸ்லாமிய நண்பர்கள் 3000 பக்தர்களுக்கு குளிர்பானம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  வீரமாகாளியம்மன் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆடிமாதம் மாதம் 6ம் தேதி  திருவவிழா முகூர்தக்காலுடன்  தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீரமாகாளியம்மனுக்கு  வீதி உலா நடைபெற்றது. 

குறிப்பாக 30 நாட்கள் இந்த கோவிலில் திருவிழாவானது நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று  திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீரமாகாளியம்மன்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் சக்கரத்தில் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மணமேல்குடி  மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த  பக்தர்கள்,பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரின்  சிறப்பு அம்சமாக அறந்தாங்கி இருக்கக்கூடிய பெரிய பள்ளிவாசலில் சுற்றி இந்த தேர் வருவதால் இதற்கு  இந்த தேருக்கு சிறப்பு அம்சம் என்று கூறுவார்கள்

நேற்று ஜூலை 27 பெரிய பள்ளிவாசல் சுத்தி வரக்கூடிய வேலையில் அங்கு இருக்கக்கூடிய ஜமாத் தலைவர் ஹாஜி  SN சேக்அப்துல்லா அலிசேக் முகமது சித்தீக் ஜமாத் துணைத்தலைவர் A கிரீன் முகமது சார்பாக 3000க்கும் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினர்  இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments