மீன் மார்க்கெட்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் உள்ள ஆசாத்நகர் மற்றும் பெரியக்கடைத்தெரு மீன் மார்க்கெட்டுகளுக்கு பல்வேறு வகை மீன்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கும். குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும்.இதனால் அதிக அளவில் இப்பகுதியில் உற்பத்தியாகும் கொடுவா, கெண்டை, வெள்ளாம்பொடி, கத்தாழை போன்ற மீன்கள் இப்பகுதியில் உள்ள பெரியக்கடைத்தெரு மற்றும் ஆசாத்நகர் மீன் மார்கெட் பகுதியில் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.
ஆண் கத்தாழை மீன்கள்
மற்ற வகை மீன்கள் அருகில் உள்ள நாகப்பட்டினம், கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதியில் இருந்து ஆசாத்நகர் மீன்மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் முத்துப்பேட்டை அலையாத்திகாடு நிறைந்த லகூன் பகுதியில் சிக்கும் அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் நேற்று ஆசாத்நகர் மீன்மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.கத்தாழை மீன்களில் ஆண் கத்தாழை மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படும். ஆண் கத்தாழை மீன்களின் வயிற்றில் இருக்கும் நெட்டி மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த நெட்டிக்காகவே இந்த மீன்கள் அதிக விலை போகும்.
ஏலம்
இந்தநிலையில் நேற்று ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டுக்கு மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மொத்தம் 3 ஆண் மீன்கள்( சுமார் 10கிலோ எடை கொண்டவை) ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இ்ந்த 3 மீன்களும் ரூ.48 ஆயிரத்து 900-க்கு ஏலம் போனது. ரூ.30 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டனா். இந்த ஏலத்தை ஏராளமானோா் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.