திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்!



 


திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதையை மின்மயமாக்குவதை தங்களின் கனவுத்திட்டமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி நாட்டில் டீசல் ரெயில்களை மின்ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டதன் மூலம் மாசு இல்லா பசுமை சூழலுக்கு வழிவகுத்ததுடன் ரெயில்வே நிர்வாகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதனால் அனைத்து ரெயில்பாதைகளையும் மின்ரெயில்பாதைகளாக மாற்றப்பட்டு வருகிறது. 

திருவாரூர் -  காரைக்குடி 

இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் திருவாரூர் - காரைக்குடி இடையேயான 148 கிலோ மீட்டர் தொலைவிக்கு மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக 2023-24 நிதியாண்டில் ரயில்வே மின்மயமாக்கல் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து ரூபாய் 143. 07 கோடிகள்  (ரூபாய் நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஏழு லட்சம் மட்டும்) அனுமதிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில் மின்மயமாக்கல் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

25-07-2023 வரை நிலவரப்படி திருவாரூர் - காரைக்குடி  வழித்தடத்தில் 4 ஜோடிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

*திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லாத ரயில் (வாரத்தில் 6 நாட்கள்)

*எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரந்திர சிறப்பு ரயில் (வாரத்தில் 1 நாட்கள்)

*செகந்திராபாத் - இராமநாதபுரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் (வாரத்தில் 1 நாட்கள்)

*தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதி விரைவு ரயில் (வாரத்தில் 3 நாட்கள்)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments