புதுக்கோட்டை கல்லணை கால்வாய் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, நெய்வத்தளி, கோயிலூர் உள்பட ஏராளமான கிராமங்களில் கல்லணைக் கால்வாய் தண்ணீர் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாயிலிருந்து நேரடி பாசனம் குறைவாகவும் ஏரி, குளம், கன்மாய்களில் தண்ணீரை சேமித்து வைத்து அதன் மூலமே அதிக பாசனமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு அடுத்த சில நாளில் கல்லணைக் கால்வாய் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தண்ணீர் வந்தது. சுமார் 25 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வந்ததால் ஏரி, கண்மாய்களில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியுள்ளது.
நிறுத்தப்பட்ட தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குறுவை சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்துள்ளது. அதனால் தண்ணீர் வரும் போது ஏரி, கண்மாய்களில் சேமித்து வைத்து சம்பா பருவத்தில் நடவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வருகிறது.
இதனால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக சம்பா சாகுபடி செய்யாத புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளுக்கு கல்லணைக் கால்வாய் மூலம் வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தயாரான நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.