ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வறட்சி நிவாரண தொகையானது மிகவும் குறைவாக உள்ளது என்றும், அதனை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். சாகுபடி ஆரம்பிக்க இருக்கின்ற சமயத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் நெல் விதைகளை தடையில்லாமலும், தரமானதாகவும் வழங்க வேண்டும். ஆவுடையார்கோவில் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும். பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, அதன் கரைகளை உயர்த்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து, ஒன்றிய துணை தலைவர் வேலு, விவசாய சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேவுகப்பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெபமாலை பிச்சை, விவசாய ஒன்றிய குழு இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.