நடுக்கடலில் தத்தளித்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீட்பு




விசைப்படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.

விசைப்படகு கவிழ்ந்தது

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரடிக்சன் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காட்டு ராஜா, பழனிவேல், ஜெகன், பழனி முருகன் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் சுமார் 18 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகில் துளை ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது. இந்நிலையில் சிறிது நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதனால் படகில் இருந்த 4 மீனவர்களும் டீசல் கேனை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்துள்ளனர்.

4 மீனவர்கள் மீட்பு

அப்போது அருகே மீன்பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அங்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டு தங்கள் படகில் ஏற்றி கொண்டு கரை திரும்பினர். இதையடுத்து கடலில் மூழ்கிய படகை மீட்க 6 விசைப்படகில் மீனவர்கள் சென்றனர். அவர்கள் படகு மூழ்கிய இடத்தை கண்டுபிடித்து பின்னர் கயிறு மூலம் படகை கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments