ஆர்.எஸ்.மங்கலம்,-திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்களால் கிராம மக்கள் பாதிப்படைகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீனவ கிராமமான அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலிருந்து 500 மீ.,ல் ஊருக்குள் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் திருப்பாலைக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை பஸ் ஸ்டாப் பகுதியிலே பயணிகளை இறக்கி விட்டு செல்லும் நிலை உள்ளது.
இதனால் மெயின் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள 500 மீ.,க்கு கிராம மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் தனியார் பஸ்கள் ஊருக்குள் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்று வருவது போல், அரசு பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்று வர வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.