விமானப்படையில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்க வருகிற ஆகஸ்ட் 17-ந் தேதி கடைசி நாள்




இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீரர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணையவழியாக விண்ணப்பிக்க வருகிற 17-ந் தேதி கடைசி நாளாகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 27.06.2003 முதல் 27.12.2006 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/என்ற இணையதள மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகிற 17-ந் தேதிக்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இத்தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments