மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராம நிர்வாகிகள், மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணிகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 32 மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், புதுக்குடி, அய்யம்பட்டினம், வடக்கு அம்மாபட்டிணம், முத்துகுடா ஆகிய பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொன்னகரம், புதுக்குடி, கீழ குடியிருப்பு, கிருஷ்ணாஜிபட்டிணம் ஆகிய பகுதிகளில் மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் கட்டித் தரப்படும் மற்றும் கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்க பணி ரூ.15 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் சீனியர் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.