சுங்கத்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீடி இலைகளுடன் வாகனம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலை மூடைகள், இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அந்த சரக்கு வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 1 டன் பீடி இலை மூடைகளை கைப்பற்றினர். தொடர்ந்து சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இது தொடர்பாக மண்டபத்தைச் சேர்ந்த செய்யது அபுதாஹிர் (வயது 45), முஸ்தபா(25), ஆசிக் ரகுமான் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், இந்த பீடி இலை மூடைகளை மண்டபம் அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. எந்த ஊரில் இருந்து இந்த பீடி இலை மூடைகள் வாங்கி கொண்டுவரப்பட்டன என்பது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.