77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டுமாவடி பள்ளி வளர்ச்சி குழு சார்பாக பள்ளி வளர்ச்சி குழு தலைவர் காந்தி சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் கட்டுமாவடி அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.K.M ஷிஹாபுத்தீன் அறக்கட்டளை சார்பாக பொருட்கள் வழங்கப்பட்டது..
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு கட்டுமாவடியில் இயங்கி வரும் பள்ளி வளர்ச்சி குழுவின் சார்பாக பள்ளிக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. பீரோ, டேபிள், சேர், மின்விசிறி, சுவர் கடிகாரம், பிரிண்டர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசையை டெம்போ வேனில் ஏற்றப்பட்டு உப்பளம் ரோட்டில் இருந்து புறப்பட்டு பள்ளியை வந்தடைந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளர்ச்சி குழுவினரை வரவேற்றனர். சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள இந்த சீர்வரிசை பள்ளிக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் அறக்கட்டளை தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
மேலும் இந்நிகழ்வில் கட்டுமாவடி பள்ளி வளர்ச்சி குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் , முன்னாள் மற்றும் இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
அறக்கட்டளையின் தலைவர் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.