புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயராணி சேகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடனம் நாடகம் மாறுவேடம் ஆகியவை நடைபெற்றது சுதந்திர தின விழாவை ஒட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது விழாவில் பள்ளி கிராம கல்வி குழு தலைவர் சக்தி சேகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஞ்சிதா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்
ஊராட்சியில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசு பாராட்டுச் சான்றிதழும் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியில் தன்னலமற்ற சிறந்த சேவையாற்றிய நான்கு பேருக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு சக்தி சேகர் அவர்களால் பரிசும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது வெள்ளூர் ஊராட்சியில் கொரோனா காலம் தொட்டு தற்போது வரை மக்களுடைய நோய்களுக்கு சிறந்த தீர்வை மக்களோடு மக்களாக கலந்து பணியாற்றி வரும் திருமதி இந்திரா கிராம சுகாதார செவிலியர் வெள்ளூர் ஊராட்சி கிராம சுகாதார பணியாளர் கருப்பையா வெள்ளூர் நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ரமேஷ் குமார் ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் திருமதி அஞ்சம்மாள் ஆகியோருடைய சேவையை பாராட்டி பரிசு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு சீனிவாசன் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.