கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து பலி




கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனா். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சகாபுதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தாஸ் (வயது 52), மாரிக்கண்ணு (50), முத்துராமன் (43) ஆகிய 3 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது தாஸ் என்பவர் திடீரென மயங்கி படகில் விழுந்தார்.

 இதையடுத்து சக மீனவர்கள் தங்களது படகை திருப்பிக் கொண்டு கரைக்கு வந்தனர். பின்னர் தாைஸ ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments