டாஸ்மாக் கடை திறப்பு
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குன்னக்குரும்பி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த கடை மூடப்பட்டது. நேற்று மதியம் 12.30 மணியளவில் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- குன்னக்குரும்பி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் தினமும் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த டாஸ்மாக் கடை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் எங்கள் கிராமத்தில் விபத்து குறைந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.