மணமேல்குடி ஒன்றியத்தில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடவாரியாக கற்றல் விளைவுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சியினை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த விளக்கங்களையும், செயல்பாடுகளையும் ஆசிரியர்களுக்கு குழு செயல்பாடுகளாக வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பாடத்திற்கு உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சியில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கோவன், ஜெய் சங்கரி, ஜெயாந்த், செந்தில் பாண்டி, துறைராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர் அங்கயற்கன்னி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.