அதிராம்பட்டினத்தில்‌ அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை மனு அளித்தனர்






அதிராம்பட்டினத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல கோரி திருச்சி  ரயில்வே கோட்ட மேலாளரிடம்  அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை மனு அளித்தார்கள் 

அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் அ.அப்துல் ரஜாக், பகுருதீன் , அஜீஸ் ரஹ்மான் ஆகியோர் 21.08.2023 திங்கட்கிழமை அன்று திருச்சியில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர்   அன்பழகன் அவர்களை   கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து அதிராம்பட்டினம் பகுதி சம்பந்தப்பட்ட இரயில்வே கோரிக்கை மனு கொடுத்தனர். உடன் திருச்சி கோட்ட முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

கோரிக்கையில் 

* அதிராம்பட்டினம்  இரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல செல்லவும் 

* பரிந்துரைக்கப்பட்ட ரயிலான திருச்சி சென்னை திருச்சி சோழன் பகல் நேர அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு அதிராம்பட்டினம் வழியாக ரயிலை இயக்க வேண்டும்

* அதிராம்பட்டினம் இரயில் நடைமேடை நீளம் குறைவாக இருப்பதால்  இரயில்களின் இரயில் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது இதனால் பயணிகள் ஏற இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவே நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் .

* அதிராம்பட்டினம் வழியாக சென்னை - காரைக்குடி இடையே இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும் 

என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட இரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments