ஆன்லைன் வசதி தொடக்கம்
கோர்ட்டு நடைமுறைகளில் ஆன்லைன் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லா நடவடிக்கையாக இதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை கோர்ட்டிலும் ஆன்லைன் வசதி தொடங்கப்பட்டது. இதற்காக கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த வசதி மூலம் புதுக்கோட்டை கோர்ட்டில் உரிமையியல், குற்றவியல் தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டுமானால் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும். இனி கோர்ட்டில் கட்டு கட்டாக ஆவணங்களை கொண்டு தாக்கல் செய்ய முடியாது. அந்த மனுக்களை இந்த மையத்தில் கணினியில் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கட்டணங்கள் ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி
அதன்பின் வழக்கமான நடைமுறைகளை கணினியிலேயே நீதிபதிகள் பார்த்து கொள்வார்கள். மேலும் ஜாமீன் மனு, முன் ஜாமீன் மனு உள்ளிட்டவற்றையும் ஆன்லைனில் தான் இனி தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனில் தாக்கல் செய்தவற்கான கட்டணங்கள், ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதி வக்கீல்கள், மனுதாரர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் பிற இடங்களில் உள்ள கோர்ட்டுகளிலும் இந்த வசதி தொடங்கப்பட்டதாக கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவித்தனர். முன்னதாக புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.