கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதியில் தீடீர் மழை




கோபாலப்பட்டிணம்,  மீமிசல் பகுதியில் தீடீரான மழை பெய்தது 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று செப்டம்பர் 4 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 
சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லமுடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்   இன்று செப்டம்பர் 04 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில்  திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து   மழை பெய்தது 

இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது .

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments