ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 45). இவரின் மனைவி மகேசுவரி (42). இவர்கள் ராமநாதபுரம் ரெயில் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற மகேசுவரி தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் பணம் வைத்த பையை ஏ.டி.எம்.மில் தவறவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்றதும் பணம், ஆவணங்கள் இருந்த பை காணாததை கண்டு மகேசுவரி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றபோது அங்கு பணத்துடன் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததை பார்த்தார். பின்னர் அதை ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த பை மகேசுவரிக்குரியது என தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை வரவழைத்து தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தனர். பெண் தவறவிட்ட பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.