கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தெரு குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்! ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை!!!




கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தெரு குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அரசு  மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தண்ணீர் வீணவது மட்டுமல்லாமல் வெளியேறி தேங்கி நிற்கும் நீரால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே உடைப்பு ஏற்பட்டிருக்கும் குழாயை உடனடியாக சரி செய்ய ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments