திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் டூ ராமநாதபுரம் வாரந்திர சிறப்பு 14.09.2023 முதல் முத்துப்பேட்டையில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
செகந்திராபாத் - இராமநாதபுரம்
செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு செல்லும்.
இராமநாதபுரம் - செகந்திராபாத்
மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு செல்லும்.
முத்துப்பேட்டை
வண்டி எண் 07695 செகந்திராபாத்- ராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் மாலை 6-00 மணிக்கு வந்து மாலை 6-01 க்கு புறப்படும்.
வண்டி எண் : 07696 இராமநாதபுரம் - செகந்திராபாத் செல்லும் வாரந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் பிற்பகல் 1-41 மணிக்கு வந்து 1-42 மணிக்கு புறப்படும்
இது குறித்து திருவாரூர் மாவட்ட TIDIRUC உறுப்பினர் ஆலத்தம்பாடி வெங்கடேசன் கூறுகையில்
13-09-2023 (புதன்கிழமை) முதல் வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலும்
மறுமார்க்கத்தில் வண்டி எண் 07696 ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 15-09-2023 (வெள்ளிக்கிழமை) முதலும் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் .
வண்டி எண் 07695 செகந்திராபாத்- ராமநாதபுரம் வண்டி வியாழக்கிழமை தோறும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் மாலை 6-00 மணிக்கு
வந்து மாலை 6-01 க்கு புறப்படும்.
வண்டி எண் : 07696 இராமநாதபுரம் - செகந்திராபாத் செல்லும் வண்டி வெள்ளிக்கிழமை தோறும் முத்துப்பேட்டை ரயில் நிலையம் பிற்பகல் 1-41 மணிக்கு வந்து 1-42 மணிக்கு புறப்படும்.
குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பகல்நேரத்தில் திருவாரூர் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிபுலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர் மற்றும் நெல்லூர் கூடூர் குண்டூர் தெனாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய நேரடி விரைவு ரயில் சேவை வண்டி எண் 07696 செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.
முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி மேலும் பல ரயில் சேவைகளை பெற்றிட துணை நிற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதி பெற்றிட துணை நின்ற நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் தோழர் திரு M. செல்வராஜ் அவர்களுக்கும் திருச்சி கோட்ட மேலாளர் திரு அன்பழகன் அவர்களுக்கும் முதன்மை இயக்க மேலாளர் திரு ஹரிக்குமார் அவர்களுக்கும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் திருச்சி கோட்ட DRUCC உறுப்பினருமான முனைவர் பவ. பாஸ்கரன் அவர்களுக்கும் இத்தருணத்தில் இதயபூர்வமான நன்றியை இப்பதிவின் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.
செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ??
நலகொண்டா,
மிரியால்குடா,
சட்டெனப்பள்ளி,
குண்டூர்,
தெனாலி,
பாபட்லா,
ஓங்கோல்,
காவாலி,
நெல்லூர்,
கூடூர்,
சென்னை எழும்பூர்,
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
திருப்பாதிரிப்புலியூர்,
சிதம்பரம்,
சீர்காழி,
மயிலாடுதுறை,
திருவாரூர்,
திருத்துறைப்பூண்டி,
முத்துப்பேட்டை
அதிராம்பட்டினம்,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி,
சிவகங்கை,
மானாமதுரை
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கு முன்பதிவானது, தற்போது நடைபெற்று வருகிறது
PC Credit : TIDIRUC
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.