தமிழக கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் மாவட்டங்களும் அதன் தொலைவும்




பனைமரத் தொழிலாளர் நல வாரியம் என்பது பனைத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான நல வாரிய அமைப்பு, இது தமிழக அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலார் நலவாரியங்களில் ஒன்று ஆகும்.

இதன்மூலம்பனை மரத் தொழிலாளர்களான —அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்கி, அவர்களின் சமூக நலட்பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme) என்பது இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்.

இது 1969-ல் தொடங்கப்பட்டது. தன்னலமற்ற சேவையின் தேவையை வலியுறுத்துகிறது. இது ஒரு தனிப்பட்ட மனிதனின் நலன் முழு சமூகத்தின் பொதுநலத்தையே சார்ந்து இருப்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தஞ்சாவூருக்கும் திருவாரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர், நீடாமங்கலம், பசுமை பரப்பும் உன்னத பணியால் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது இந்த ஊர்.

இப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து, கிரீன்நீபா என்ற அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 23 குறுங்காடுகளை உருவாக்கி பராமரித்தும் வருகின்றனர். ஆண்டுதோறும் பனைத்திருவிழா நடத்தி ஆயிரக்கணக்கான பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் சேவையில் சிறப்புற பணியாற்றியமைக்காக 2021-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் "பசுமை முதன்மையாளர் விருது பெற்றுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments