புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் சில விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 2 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் என மொத்தம் ரூ.11½ லட்சம் வழங்கிட ஆணையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மணமேல்குடி தாலுகாவை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் முருகேஸ்வரி, மரிய சாமுவேல், நாட்டுப்படகு உரிமையாளர் ஜெயஇருதயம் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று வழங்கினார். இந்தநிகழ்வில், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செய்யது முகம்மது, துணை இயக்குனர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.