புதுக்கோட்டை: மருத்துவக் காப்பீட்டுத் திட்ட 5ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி




முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஒருங்கிணைந்த மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆகியவற்றின் 5ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத் திட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா பாராட்டு கேடயங்களையும் வழங்கினாா்.

மேலும், காப்பீட்டுத் திட்டம் தொடா்பாக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) ராஜ்மோகன், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் பெ. ரவி, தேசிய நல வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் ரெ. சரவணன், காப்பீட்டுத் திட்ட அலுவலா் சு. ரவிசங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments