வனப்பகுதியில் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கீரனூர், பொன்னமராவதி, திருமயம், அறந்தாங்கி ஆகிய வனச்சரகங்களில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் வனச்சரக அலுவலர் சதாசிவம், பெருங்களூர் பிரிவு வனவர் முருகானந்தம், ஆலங்குடி பிரிவு வனவர் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை பிரிவு வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் புதுக்கோட்டை வனச்சரகத்தில் வராப்பூர் கிராமத்திற்கு அருகில் தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடியவர்கள் சிக்கினர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த அருண், வீரபாண்டியன், உருமைய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
முயல்கள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து உயிருடன் ஒரு முயலும், இறந்த நிலையில் ஒரு முயலும், வேட்டைக்கு பயன்படுத்திய டார்ச் லைட், ஒலி அதிர்வு எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் வன உயிரினங்களை வேட்டையாடினால், தொந்தரவு செய்தால், வீட்டில் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.