தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி வட மாநிலங்களில் பெய்தது. தமிழகத்திலும் பரவலாக மழை பெய்ததால் தண்ணீர் பிரச்சனை ஏற்படவில்லை.
ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. 4 மாத காலத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதியில் இருந்து கடந்த 10-ந்தேதி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்: கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரம்.. பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது
இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக உருவாகி உள்ளது. இதற்கிடையில் வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது 23-ந் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தொடங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் அடையாளமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் லேசான மழையும் ஒருசில நேரங்களில் கனமழையும் பெய்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.