ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டானி புரசக்குடி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கோபாலபட்டினத்தில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடப்பதால் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தியும், இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதனை வலியுறுத்தி தர்ணா, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் புதிதாக வீடு கட்ட ரூ.20 ஆயிரம் பெற்றுக்கொண்டு ரூ.330-க்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டதாக கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர் பரபரப்பு குற்றச்சடையும் வைத்துள்ளார்
இதையடுத்து, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மீமிசல் கிளை செயலாளர் அமீர் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.