சம்பா நெல் சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக நாற்று நடவு பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சம்பா பருவத்திற்கு வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் உள்ளனர். மழை போதுமான அளவு பெய்தால் விவசாயம் செழிக்கும்.
இதற்கிடையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்க வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
உர மூட்டைகள்
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் நேற்று உர மூட்டைகள் வந்தன. 21 வேகன்களில் யூரியா 724 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 316 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 252 மெட்ரிக் டன் என மொத்தம் 1,292 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன. இவை அனைத்தும் தனியார் நிறுவன உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
உர மூட்டைகள் வந்திறங்கியதை வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். புதுக்கோட்டையில் நேற்று லேசாக மழை தூறியபடி இருந்ததால் உர மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடி லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.