ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் செலவு நிதி வசூல் செய்தல், விவசாய சங்க பேரவை நடத்துதல், இளைஞர் பெருமன்றம், மகளிர் அமைப்புகள் அமைத்தல் உள்ளிட்ட கட்சியினுடைய எதிர்கால இயக்கம் பற்றி பேசினார். கூட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் 60 சதவீத விவசாயிகள் பாதிப்புக்குள்ளானார்கள். எனவே அனைவருக்கும் பயிர் இன்சூரன்ஸ் காப்பீட்டு இழப்பு தொகை முழுமையாக வழங்க வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சி மருந்துகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றை 100 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். வெள்ளாற்றில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.